சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் எதுகை முனையாக பேசுகிறேன் என்ற பெயரில் திரிஷா குறித்து பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதற்கு, பலரும் பார்த்திபனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் தான் இயக்கிய முதல் படத்திலேயே அதீத கவனத்தை ஈர்த்த பிறகு இயக்கிய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட பல வெற்றி தோல்விகளை சந்தித்து இருந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென தனி மதிப்பை கொண்டிருக்கிறார்.

ஒரு பட விழாவில் பேசிய பார்த்திபன் நான் ஒரு நாயுடு பையன் ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அதன் காரணமாக தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை இங்கே வரும்போது தெலுங்கில் நன்றாக பேசும்படி கற்றுக் கொள்வேன். இது சத்தியம் எனக் கூறியிருந்தார்.

எதற்காக இப்படி சாதியை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். மேலும், தனக்கு சாதியே பிடிக்காது என்றும், அந்த மேடையில் பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். அப்படி பேசியது தவறுதான் என விளக்கம் அளித்தார்.

ஆனால், அவரை பலரும் விடுவதாக இல்லை. இப்படி இருக்கும் நிலையில், தற்போது புதிய வீடியோவை ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், சாதி இல்லை மதம் இல்லை என்று சான்றிதழ் பெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இதனால், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அது மட்டும் இன்றி அவர் இன்று நீதிமன்றத்திற்கு அணிந்து வந்திருந்த கண்ணாடியும் ஹைலைட் ஆகியிருக்கிறது. ஒரு கண்ணுக்கு N எழுத்து வடிவிலும் இன்னொரு கண்ணுக்கு O எழுத்து வடிவிலும் அந்த கண்ணாடி டிசைன் செய்யப்பட்டிருந்தது. சாதி மதத்திற்கு NO என்பதை குறிக்கும் விதமாக அப்படி ஒரு கண்ணாடி அவர் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

