கோபிசெட்டிபாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தனது நீண்ட கால நண்பரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதால் அவரைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பரப்புரையில் பேசிய அவர் அங்க போய் ஒரு துண்டை அணிவிக்கிறாங்க இவரும் அந்த துண்டை வாங்குகிறார். இப்போது, யார் புகைப்படத்தை வைத்திருக்கிறார் என்று கேட்டபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் திரிஷா ஃபோட்டோ என்று கமெண்ட் அடித்தார்.

மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!
அதற்கு பழனிச்சாமியோ சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருக்கிறார். அதில், எல்லாம் அவர் கைதேர்ந்தவர். நீ எல்லாம் என்னைப் பற்றி கேவலமாய் பேசுகிறாய் என்று பேசியிருந்தார். இதனை பார்த்த த்ரிஷா ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். உங்கள் பிரச்சினையில், எதற்காக த்ரிஷாவை இப்படி வம்பு இழுக்கிறீர்கள். இதற்கெல்லாம், உடனடியாக மேடம் முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். முன்னதாக, அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் கூட நடிகை நயன்தாரா பற்றி கொச்சையாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
EPS: இப்போ யாரு photo va வச்சிருக்காரு??
— Venkatramanan Mathiyalagan (@Venki094) April 18, 2026
Cadres: Trisha photo
Damn! 🤣🤣🤣🤣🤣@KASengottaiyan pic.twitter.com/D0Z7LKhHAo

