கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அரசின் கீழ் இயங்கும் முதன்மையான சுகாதார நிலையமாகும். இது பொது சுகாதாரம், சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவக் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்குகிறது. அவசர சிகிச்சை மற்றும் நவீன வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைப் பெண்களுக்குத் தரமான சிகிச்சை மட்டுமின்றி, கனிவான கவனிப்பும், அடிப்படை இருக்கை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இங்கு கர்ப்பிணிகளை தரையில் அமர வைப்பது மனித நேயமற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மேலும், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இந்தத் தவறை உணர்ந்து, உடனடியாகக் கூடுதல் இருக்கைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

