தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா. இவரின் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ்காக காத்திருக்கிறது. இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தேர்தல் முடிந்த பின் வெளிவரும் என இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி முன்னதாகவே பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, தனது 46-வது மற்றும் 47-வது படங்களில் சூர்யா பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஆதவன் படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ளார்.

அதில், கிளைமாக்ஸ் கட்சியில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஸ்டண்ட் செய்திருப்பார். சூர்யா அந்த அனுபவத்தை பற்றி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறுகையில், ஆதவன் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டே பாம் வைக்கிற மாதிரி ஒரு சீன் இருந்தது.
நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சூர்யா அந்த ரிஸ்கை எடுத்தார். கீழே இருந்து ரோட்ல ஃபுல் ஃபோர்ஸ்ல அவரை மேலே இழுத்தார்கள். அப்போ எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் இருந்து கம்பி நேரா அவர் தலையில் இடிக்கிற மாதிரி வந்தது. நல்ல வேலையா அவர் டக்குனு அசைந்ததால், கம்பி அவர் தோள்பட்டையில் மட்டும் பட்டு போய்விட்டது.

ஒரு வினாடியில் பெரிய விபத்து நடக்காமல் சூர்யா தப்பித்தார். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் ஆளே காலி ஆகி இருப்பார் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் சூர்யா குறித்து தெரிவித்துள்ளார்.

