Close Menu
    What's Hot

    ஜனநாயகமா? பண நாயகமா?.. SIR குறித்து கிருஷ்ணசாமி காட்டம்..!

    April 27, 2026

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!

    April 27, 2026

    4000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு.. சர்க்கரை நோய் சிகிச்சையில் அசத்தும் புதிய தொழில்நுட்பம்..!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது – ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள்
    தமிழ்நாடு

    கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது – ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள்

    Prime ReporterBy Prime ReporterDecember 23, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு, பகலாக காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், ‘கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது’ என கூறி, கருப்பு துணிகளால் கண்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்தால், அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நீண்ட காலம் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு நாட்களாக இரவு, பகல் பாராமல் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாமல், குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செவிலியர்கள் தெரிவித்தனர். தினமும் உயிர்களை காக்கும் பணியில் ஈடுபடும் தங்களது வாழ்க்கை இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதற்கிடையே, அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 700 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது போதுமானது அல்ல என்றும், பணியாற்றும் அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    அனைத்து கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படாததால், ஐந்தாவது நாளாக இன்று நடைபெறும் போராட்டத்தில், தங்களது குரல் கேட்கப்படாத நிலையை சூசகமாக வெளிப்படுத்தும் வகையில், கருப்பு துணிகளை கண்களிலும் கைகளிலும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு எப்போது தீர்வு வழங்கும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    April 27, 2026

    திரிஷாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 27, 2026

    பீரோவை உடைத்து கொள்ளை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது என்ன?..

    April 27, 2026

    அது ஒரு இருண்ட காலம்.. ரசிகர்களை கலங்க வைத்த ஹன்சிகாவின் உருக்கமான பேட்டி..!

    April 27, 2026

    தப்பு தப்பா பேசாதீங்க.. மயில்சாமி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளவரசு..!

    April 27, 2026
    Don't Miss

    ஜனநாயகமா? பண நாயகமா?.. SIR குறித்து கிருஷ்ணசாமி காட்டம்..!

    April 27, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு சடங்கு போல நடைபெற்றதாகவும், பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் வலியுறுத்தினார்.

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!

    April 27, 2026

    4000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு.. சர்க்கரை நோய் சிகிச்சையில் அசத்தும் புதிய தொழில்நுட்பம்..!

    April 27, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.