Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது – ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள்
    தமிழ்நாடு

    கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது – ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள்

    Prime ReporterBy Prime ReporterDecember 23, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு, பகலாக காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், ‘கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது’ என கூறி, கருப்பு துணிகளால் கண்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்தால், அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நீண்ட காலம் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு நாட்களாக இரவு, பகல் பாராமல் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாமல், குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செவிலியர்கள் தெரிவித்தனர். தினமும் உயிர்களை காக்கும் பணியில் ஈடுபடும் தங்களது வாழ்க்கை இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதற்கிடையே, அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 700 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது போதுமானது அல்ல என்றும், பணியாற்றும் அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    அனைத்து கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படாததால், ஐந்தாவது நாளாக இன்று நடைபெறும் போராட்டத்தில், தங்களது குரல் கேட்கப்படாத நிலையை சூசகமாக வெளிப்படுத்தும் வகையில், கருப்பு துணிகளை கண்களிலும் கைகளிலும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு எப்போது தீர்வு வழங்கும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.