இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’ படம் மூலம் பிரபலமான நடிகை வினோதினி, சென்னை ஸ்பா ஒன்றிற்கு மசாஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார். மசாஜ் செய்யும் முன்பு தனது தங்கத் தாலி சங்கிலியைக் கழற்றி அங்குள்ள ஒரு டப்பாவில் (பொருட்கள் வைக்கும் இடத்தில்) பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில், மசாஜ் முடிந்து பார்த்தபோது அது மாயமாகியிருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
முன்னதாக, மன அழுத்தத்தில் இருந்த வினோதினி, தி.நகரில் உள்ள ஸ்பாவிற்குச் சென்றுள்ளார். அங்கு மசாஜ் செய்வதற்காகத் தாலியைக் கழற்றி, ஸ்பா நிர்வாகம் வழங்கிய ஒரு டப்பாவில் வைத்துள்ளார். மசாஜ் முடிந்து ரிலாக்ஸ் நிலையில் இருந்ததால், கவனக்குறைவாகத் தாலியை எடுக்க மறந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, கணவர் வீட்டின் துக்க நிகழ்வு காரணமாக அவர் அவசரமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!
இரண்டு நாட்கள் கழித்து தாலியைத் தேடிய வினோதினி, ஸ்பாவிற்குச் சென்று விசாரித்துள்ளார். ஆனால், ஸ்பா ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் எந்தப் பொறுப்பும் எடுக்காமல், “நீங்கள் வந்த பிறகு பலர் வந்து சென்றார்கள், எங்களுக்குத் தெரியாது” என்றும், “இத்தனை நாள் ஏன் கேட்கவில்லை?” என்றும் பதிலளித்து அலட்சியமாக நடந்துகொண்டனர். அவர் கிளம்பும் போது செருப்பை மட்டும் தட்டில் வைத்து மரியாதையாகக் கொடுத்த ஊழியர்கள், தாலி இருந்த டப்பாவைக் கவனிக்கவில்லை என்பது வினோதினியை மேலும் கோபப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், ஸ்பா நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும், அங்கே தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தையும் கதறிழுது குறிப்பிட்டுள்ளார். மேலும், செருப்பை தட்டில் வைத்துக் கொடுத்தது போன்ற அவமரியாதையான செயல்களையும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், தான் இழந்த தாலி நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ள வினோதினி, பெண்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். “இதுபோன்ற ஸ்பாக்களுக்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை ஸ்பாவிற்குச் செல்லும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்கவும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

