ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் முதலில் கடந்த மாதம் 31-ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ஜூலை 23-ல் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வெளியானதால், பாக்ஸ் ஆபிஸ் மோதலைத் தவிர்க்கப் படக்குழு ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்துள்ளது.
ப்ரோமோஷன் பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சய், “உனக்கு என்ன வேண்டும் என்பதை நீதான் வந்து கேட்க வேண்டும், நானாக வந்து உதவ மாட்டேன்” என்று விஜய் தனக்குக் கூறிய அறிவுரையைப் பகிர்ந்துள்ளார். இதைக் கொண்டு தந்தை – மகனுக்கு இடையே சண்டை என்ற வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது.
“ஜனநாயகன்” படத்தைப் பார்த்து விழிப்புணர்வு.. பாலியல் வெறியன் அதிரடியாக கைது..!
ஜேசன் சஞ்சய் படத்தின் PRO-வாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பணியாற்றியுள்ளார். அஜித்திடம் அனுமதி கேட்டு அவர் வேலை செய்ய முன்வந்தபோது, “தாராளமாக வேலை செய்யுங்கள், சினிமாவில் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள், நான் உன்னுடன் நிற்கிறேன்” என்று அஜித் ஜேசனைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாகப் பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தெரிவித்துள்ளார்.

