கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் போத்தனூர் குற்றப்பிரிவில் பணியாற்றும் மணிவேந்தன் (32). என்ற காவலர் பயணித்துள்ளார்.
அப்போது பேருந்து கிணத்துக்கடவு அருகே வந்த போது, கோவை தனியார் கல்லூரியில் 2 ஆண்டு படித்து வரும் 18 வயது மாணவி பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் மாணவி படியில் பயணம் செய்தார். அப்போது மாணவிக்கு உதவி செய்வது போல சீருடையில் இருந்த மணிவேந்தன் பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார்.
திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கூச்சலிடவே, ஈச்சனாரி அருகே கீழே இறங்கி காவலர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் மாணவி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகார் அடிப்படையில் காவலர் மணி வேந்தனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

