டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் செந்தில் பாலாஜி தனது கடவுச்சீட்டை (Passport) புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்பான நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது செல்வாக்கைச் செலுத்தவோ முயற்சிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
தரிசன நேரம் குறைப்பா?.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலவரம்..!
இந்த வழக்குத் தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தள்ளுபடியால் உடனடி கைது நடக்கும் என்ற சூழலில் இந்த இடைக்காலத் தடை செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

