கோவை அடுத்த கோவைபுதூரில் நாலாவது பட்டாலியன் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். இவர் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துதாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
சர்வாதிகாரி போல் நடப்பது அழகல்ல.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!
விசாரணையில் அவர் தனது பெயர் மற்றும் மனைவி, உறவினர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் ஒரு கோடியே 28 இலட்சத்துக்கு சொத்துக்களை சேர்த்தது தெரியவந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

