தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!
இவ்வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் வழங்கப்படவில்லை என்றும், சாட்சிகள் பட்டியலில் இருந்து சிலரை நீக்க வேண்டும் என்றும் முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஏற்கனவே பெரும்பாலான வாக்குமூலங்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுவிட்டன” என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

