ஜூன் 1 முதல் ஜூன் 15, 2026 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் (சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட) உள்ள மின் பகிர்மான வட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் மொத்தம் 59 மின் திருட்டுகள் மற்றும் 11 மின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதற்காக இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ. 68.81 லட்சம் (ரூ. 68,80,889) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டம்: ரூ. 26.71 லட்சம்
திருச்சி கோட்டம்: ரூ. 19.56 லட்சம்
சென்னை கோட்டம்: ரூ. 15.77 லட்சம்
மதுரை கோட்டம்: ரூ. 6.75 லட்சம்
சம்பந்தப்பட்ட நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அபராதத் தொகையைச் செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு குறித்த புகார்களைத் தெரிவிக்க, அந்தந்த அமலாக்கக் கோட்டப் பிரிவுகளின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
(கோயம்புத்தூர் அமலாக்கக் கோட்டப் பிரிவு எண்: 9443049456)

