தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அண்மையில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் அரசியல் களம் குறித்து திரைத்துறை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வாரந்தோறும் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை விஜய் சந்தித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், விஜே ரம்யா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அவரைச் சந்தித்துள்ளனர்.
அப்பாவ அங்க தேடாதிங்க.. முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!
இந்தச் சந்திப்புகளின் போது தனக்கு நெருக்கமானவர்களிடம்,
“அரசியல் களம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பயமாக இருக்கிறது. சுற்றிலும் அனைவரும் கத்தியை வைத்துக் கொண்டு நிற்பது போல தோன்றுகிறது”
என விஜய் புலம்பியதாக பனையூர் மற்றும் கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அவருக்கு தைரியம் கூறி வரும் நிலையில், த.வெ.க. தொண்டர்களும் ரசிகர்களும்
“தளபதி, நாங்கள் உங்களோடு இருக்கிறோம், தைரியமாக இருங்கள்”
என சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

