கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள், ஆலய ஊழியர்களால் கோவில் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான பொருட்களை ஏற்றி பயன்படுத்தியதால் பல சக்கர நாற்காலிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை சரிசெய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!
இதன் காரணமாக கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்காக வழங்கப்பட்ட உபகரணங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது வேதனையளிப்பதாகவும் பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே, கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சக்கர நாற்காலிகளை சீரமைத்து, அவை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

