மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தபோது, எடப்பாடி பழனிசாமி (EPS) அணிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர் மற்றும் ராகேஷ் ஆகிய முக்கிய மூத்த எம்.எல்.ஏ.க்கள் அவையிலேயே அமர்ந்திருந்தனர். இது கட்சிக்குள் இருக்கும் பிளவை மீண்டும் காட்டியுள்ளது.
ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே வென்றதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிருப்தி குழு உருவானது. இடையில் சமரசம் ஏற்பட்டு வேலுமணி தரப்பு இபிஎஸ்-உடன் இணைந்ததாகக் கூறப்பட்டாலும், இந்த சட்டப்பேரவை நிகழ்வு உள்கட்சி பூசல் இன்னும் ஓயவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த புதிய பிரிவினை அதிமுகவிற்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

