நடிகை கௌதமியின் ₹25 கோடி சொத்து மோசடி வழக்கில், தற்போது அமலாக்கத்துறை (ED) அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது. மோசடி புகார் கூறப்பட்ட அழகப்பனுக்குச் சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2004-ல் நடிகை கௌதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், போலியான ஆவணங்களைத் தயாரித்து அவரின் ₹25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன் என்பவர் ஏமாற்றிப் பறித்துக் கொண்டதாகப் புகார் எழுந்தது.
என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!
இந்த வழக்கில் அழகப்பனுக்கு ஆதரவாக பாஜகவின் சில மூத்த நிர்வாகிகள் இருந்ததாகவும், அதனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தாமதமானது என்றும் கூறி, கடந்த 2023 அக்டோபரில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து அதிரடியாக விலகினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
கௌதமி அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே அழகப்பன், அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த சொத்து மோசடியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதை உறுதி செய்த அமலாக்கத்துறை, தற்போது இந்த அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளது. இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

