இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே உலுக்கியுள்ளது. அஞ்சலி செலுத்த வந்த நடிகர் வடிவேலு, துக்கம் தாங்காமல் தேம்பித் தேம்பி அழுது, மயக்கமடைந்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ வைத்துள்ளது. திரையுலகில் தனக்கு வழிகாட்டியாக இருந்த மாபெரும் ஆளுமையின் உடலைப் பார்த்ததும் வடிவேலு நிலைகுலைந்து போனார்.
பணமோ, பதவியோ நோக்கமல்ல.. அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்..!
நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்ததால் லேசான மயக்கம் ஏற்பட்டு, அருகில் இருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்து இளைப்பாறினார். அதே நிகழ்வுக்கு வந்திருந்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன், அங்கு வந்திருந்த அமைச்சர் வன்னி அரசுவைக் கண்டதும் கைகூப்பி வணக்கம் செலுத்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, சோகத்தில் அமர்ந்திருந்த வடிவேலுவை நேரில் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, அவருக்கு ஆறுதல் கூறினார்.
தங்களின் பழைமையான நட்பை வெளிப்படுத்தும் விதமாக வடிவேலுவின் கன்னத்தைக் கிள்ளி அமைச்சர் தேற்றிய நெகிழ்ச்சியான காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வடிவேலுவை கொஞ்சிய அமைச்சர் வன்னியரசு 😍🥰❤️ pic.twitter.com/Gt0u6QFmB7
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 11, 2026

