2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் இவர் பதிவிட்டிருந்த பதிவு பலரிடையே பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என ஒரு ரவுண்டு வந்தவர் நிவேதா பெத்துராஜ்.
இவர் BOO படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், இரு மொழிகளிலும் பெரிதாக அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே திரைப்படங்கள் அமையவில்லை. இறுதியாக, 2024 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பருவு என்னும் வெப் சீரியஸில் நடித்திருந்தார். அதன் பின் கூட பெரிதாக நிவேதா பெத்துராஜை காண முடியவில்லை.
விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!
இந்நிலையில், சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. என்னை நம்பியவர்களுக்கும் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், எனக்கு போட்டியாக இருந்தவர்களுக்கும் என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி என அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த பதிவுக்கு பழையபடி நிறைய படங்களை கமிட் செய்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
முன்னதாக, பல இளம் நடிகைகள் கடந்த சில காலமாகவே பட வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன அதிர்ச்சி சம்பவங்களும் நடந்து இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) June 10, 2026

