நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் 1 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஸ்ரீநிவாச சேதுபதி தோற்கடித்தார். தபால் வாக்குகள் தவறாக எண்ணப்பட்டதாக திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தரப்பில் இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இதை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என தடை விதித்திருந்தார். இதை எதிர்த்து, தமிழக வெற்றிக்கழக தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது.
இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்தது மிகவும் தவறானது என ஸ்ரீனிவாச சேதுபதி தரப்பில் வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்தார். மேலும், இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. இது கடுமையானது எனக் கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

