தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மரியாதை நிமித்தமாக தமிழக வெற்றி கழக தலைவர் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்தார். அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை முதலில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். வைகோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானையும் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

