தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவி விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
அதற்காக, அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 234 தொகுதிகளிலும், ஒரு தொகுதி காலியாகிவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பணம் இல்லை என்று சொல்லாதீர்கள்.. வெள்ளை அறிக்கை குறித்து ஸ்டாலின் காட்டம்..!
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 13ஆம் தேதிக்குள் அரசின் மீதான நம்பிக்கை கூறும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி பெரும்பான்மையின் நிரூபிப்பதற்காக ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக சட்டசபை எப்போது கூடும் என்று இன்று தெரியவரும்,

