தமிழகத்தின் 14வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே தனது முதல் கையெழுத்தை இட்டார். இதுவரை, இல்லாத நிகழ்வாக விழா மேடையில் முக்கிய கோப்புகளை கையெழுத்திட்டார். அதில், இரண்டு மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். போதைப் பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய் அதனை தொடர்ந்து பேசியதாவது, எனக்கு வறுமை, பசி என்று என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. நான் தேவதூதன் அல்ல.
சாமானிய மனிதன். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். தமிழ்நாடு அரசு நிதிநிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டின் கஜானா காலியாக உள்ளது.
வழித்து துடைத்து வைத்திருக்கிறார்கள். எனக்கு அவமானம் கஷ்டம் கொடுத்தவர்களாக இருந்தாலும், நண்பன் எதிரி என யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான் என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார்.

