தமிழகத்தின் 14வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவி ஏற்கும் போது, தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சர் ஆன விஜய் புன்னகையுடன் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவியேற்பு விழா முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே தனது முதல் கையெழுத்தை இட்டார். இதுவரை, இல்லாத நிகழ்வாக விழா மேடையில் முக்கிய கோப்புகளை கையெழுத்திட்டார். அதில், இரண்டு மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்திட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். போதைப் பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

