தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததை அடுத்து தற்பொழுது, 112 எம்எல்ஏக்களையும் தன்வசம் வைத்துள்ளார்கள்.
முன்னதாக, காங்கிரஸ் ஆதரவு அளித்தது 112 எம்எல்ஏக்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ளது. 118 என்ற மேஜிக் எண் பெற இன்னும் ஐந்து இடங்கள் தேவைப்படுகிறது என்ற நிலையில் கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார்.
தவெக-விற்கு ஆதரவு அளித்த கை… “நன்றி மறந்துவிட்டார்கள்” ஆ.ராசா கடும் அதிருப்தி..!
அதாவது, மெஜாரிட்டிக்கான முழு பட்டியலை கொடுக்கவில்லை என்பதால், கவர்னர் அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பெரும்பான்மை உள்ள 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தருமாறு விஜய்யிடம் கவர்னர் கேட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிப்பெரும் கட்சியாக இருந்தால் வழக்கமாக கவர்னர் அழைப்பு விடுப்பதே மரபாக இருந்த நிலையில், தற்போது கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீண்டும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். இதற்காக விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். தனி பெரும்பான்மை கட்சி என்று அடிப்படையில், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் மீண்டும் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிப்பேன் எனவும், ஆளுநரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்ததாக கூறப்படுகிறது.
ஆளுநர் விஜய் இடையே சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது இதன் பின்னர் விஜய் ஆளுநர் மாளிகையிலிருந்து கட்சி அலுவலகமான பணிகளுக்கு புறப்பட்டு சென்றார். இதனிடையில், விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்புக்கான அறிவிப்பு வழியாகும் என்றும் கூறப்படுகிறது.

