நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில்
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
என பதிவு செய்துள்ள ரஜினியின் டயலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
— venkat prabhu (@vp_offl) May 6, 2026
முன்னதாக, அதிமுகவில் சில எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில், அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைக்கும் என்றும், பேச்சுக்களும் எழுந்தது. இதனால், தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது.

