234 தொகுதிகளுக்கும் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தீவிரமாக எண்ணப்பட்டு வருகின்றன. இதனால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் மகனின் அரசியல் பயணம் வெற்றியடையவும், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியில் அமரவும் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள்.. மனமுருகி பிரார்த்தனை செய்த நடிகை த்ரிஷா..! (வீடியோ)

கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சில உறவினர்கள் கலந்து கொண்டதாகவும், தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என அனைவரும் இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் காலை 8 மணி முதல் தொடங்கியது இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் கட்சிகள் அனைத்தும் பதற்றத்துடன் எதிர்பார்த்தும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

