கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏனைய 233 தொகுதிகளிலும், மேலும் எடப்பாடியில் சுயேச்சை ஒருவரை ஆதரித்தும் களம் இறங்கியது.

2026-ல் அற்புதம் நடக்கப் போகுது.. விஜய் குறித்து செங்கோட்டையன் கொடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்..!
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்புகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது, தேர்தல் முடிவுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில் நாலு கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், ஒரு கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாகவும். மற்றொரு கருத்துக்கணிப்பு தவெக ஆட்சிக்கு வரும் என்றும் கூறி இருக்கிறது.

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை.. விஜய் போட்ட ‘அந்த’ கன்டிஷன்..!
தமிழக வெற்றிக்கழகம் ஒரு வலிமையான சக்தியாக விளங்கும். மேலும், அது ஆச்சிரியங்களை ஏற்படுத்தக்கூடும் முடிவுகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

திராவிட இயக்கம் தியாகத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நிரந்தர சக்தியாக விளங்கும். பாரதிய ஜனதா கட்சி கற்பனை செய்வது போல் அவர்களால் திராவிட இயக்கத்தின் அடித்தளங்களை அசைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. நாம் பாரதிய ஜனதா மற்றும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்த்து போராட வேண்டும். அந்த குறிக்கோளுக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் அதை எதிர்த்து போராடுவோம். மேலும், இளைஞர் மற்றும் மாணவர் சக்திக்குள் நாம் ஊடுருவ வேண்டும் அதுவே திராவிட இயக்கத்தின் தேவை என்று பேசி உள்ளார்.

