கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏனைய 233 தொகுதிகளிலும், மேலும் எடப்பாடியில் சுயேச்சை ஒருவரை ஆதரித்தும் களம் இறங்கியது.

2026-ல் அற்புதம் நடக்கப் போகுது.. விஜய் குறித்து செங்கோட்டையன் கொடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்..!
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை இன்று சென்னை வருமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் அழைத்திருந்தார். வரும்போது வாக்குப்பதிவு நாளில் தேர்தல் அலுவலர் வழங்கிய 17 சி படிவத்தை எடுத்து வருமாறும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் இன்று மதியம் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசி இருந்தார்.

அப்போது பேசுகையில்,
தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம், வேட்பாளர்களாகிய நீங்கள் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். பனையூர் அலுவலகத்திற்கு வந்து விடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன். இதுவரை நன்றாக பணிபுரிந்து உள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கை நாளில் மிகவும் கவனமாக இருங்கள்.
என்று அறிவுரை வழங்கினார். மேலும், ஆளும் கட்சியும் ஆண்ட கட்சி பணம் கொடுத்து அழைத்தால் கட்சியை தவற விடாதீர்கள் என்பதை தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இவ்வாறு கூறியுள்ளாராம்.

