கமலஹாசன் மகளான ஸ்ருதிஹாசன் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளாக நடித்திருந்தார்.

திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!
இந்நிலையில், பிரபல ஆங்கில youtube சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அதில், தனது வாழ்க்கையை மாற்றிய ஆன்மீக அனுபவம் குறித்து அவர் உணர்ச்சிகரமாக பகிர்ந்து இருக்கிறார். அதாவது, தன் வாழ்க்கையில் சமீபத்தில் தான் வராகி அம்மன் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், நாம் மட்டுமல்ல கடவுளும் நம்மை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்.

நான் அன்று சற்று சோகமாக இருந்ததால், என் நண்பன் வெளியே போனால் நல்லா இருக்கும் என என்னை வராகி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அது ரொம்ப சின்ன கோவில் தான். அந்த கோவிலில், டென்ஷன் இல்லை. விஐபி வரிசை இல்லை. நார்மலான ஒரு கோவில்.

ஆனா அந்த கோவிலுக்குள்ளே எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. அன்றுதான் நான் நாம மட்டும் இல்ல கடவுளும் நம்மை தேர்ந்தெடுக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு என்னுடைய மனதிற்குள் இருந்த பயம் எல்லாமே சென்று விட்டது. ஏதோ ஒரு பெரிய தெளிவு கிடைத்தது மாதிரி நான் அன்று உணர்ந்தேன் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள இந்த ஆன்மீக அனுபவம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

