மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தில் சமீபத்தில் தான் டி என் ஏ டெஸ்ட் மூலம் ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் எப்போதும் என்னை விட்டு போக மாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்.

ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!
அவர் உனக்காக வாழ்வேன். எதையும் எதிர்கொண்டு போராடுவேன். உனக்காக வாழ்ந்து உன்னை பெருமைப்பட வைப்பேன் என்று கூறினார் என மகன் பேசுவது மாதிரியான கேப்சனை போட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகளை பார்த்து மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி ஸ்ருதி டென்ஷனாகி இருப்பார் போல, உடனே அவர் தன் பங்குக்கு எனது குடும்பத்தை தவறான குற்றச்சாட்டு மூலம் மிரட்டவோ அவதூறு பரப்பவும் எந்த முயற்சிகள் நடந்தாலும் எனது குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கும் ஆதரிப்பதற்கும் நான் உறுதியாக இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
அவர் இப்படி போஸ்ட் போட்ட சில மணி நேரத்திலே ஜாயும் ஒரு போஸ்ட்டை போட்டு இருக்கிறார். அதில், குழந்தையின் கையுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று பதிவிட்டு இருந்தார்.
நேர்மையா இருக்கிறது Defamation கிடையாது! பொய் சொல்லுறது ஏமாத்துறது மாத்தி மாத்தி பேசுறது அறம் தவறி நடப்பது தான் குற்றம்! அந்த பொய் புரட்டுக்கு துணை நிற்பது அவமானத்தின் அடையாளம், உங்கள் குடும்பத்தின் இரட்டை முகம் கொண்ட மனிதர்களிடமிருந்து மிரட்டல்களில் இருந்தும் காப்பாற்றுங்கள். நீங்கள் யாரை ஆதரித்தாலும் பரவாயில்லை. நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. நீங்கள் தப்பிக்க முடியாது. உருட்டு உருட்டு நன்றாக உருட்டு என்று தெரிவித்து இருந்தார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

