தமிழக வெற்றி கழகத்தில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராக திகழ்வர் செங்கோட்டையன். இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இருந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய நிலையில், அவர் திடீரென கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

பெண்களிடம் அத்துமீறல்?.. ரகளை செய்து கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்..!
எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையனை விஜயும் எந்தவித தயக்கமும் இன்றி இக்கட்சியில் சேர்த்துக் கொண்டார். இந்த சூழ்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கோட்டையன் அவர் சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிடுகிறார். அவர் வழக்கம் போல் வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாகவும் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் சேரும் முடிவை அவசரப்பட்டு எடுத்து விட்டதாகவும், வேறு யாரும் அந்த தவறை செய்து விட வேண்டாம் என்று அவர் அதிமுகவின் முக்கிய தலைவர்களிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்தவுடன் அவர் விஜயுடன் இருப்பார் என்றும் அவரின் தலையீடு கட்சியில் அதிகம் இருக்கும் என்றும் அவரின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை அனுபவத்தை தவெக கட்சியினர் பெற்றுக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ள இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

