தமிழ் சினிமாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியாகிய வெற்றி திரைப்படமான ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை மோகினி. பின்பு, இவர் ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.
நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 2007-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை என்ற படத்தில் நடித்த அவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து, அவர் மலையாள படமான ‘கலெக்டர்’ என்ற படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இவரது கண்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்பு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.

மேலும், இவர் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகையாக இருந்ததாகவும், அவர் மீது வெறித்தனமான அன்பை வைத்துள்ள இவருக்கு வருத்தம் என்னவெனில் ஏ ஆர் ரகுமான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சமயத்தில், ஏ.ஆர்.ரகுமான் இந்துவாக இருந்துள்ளார். திலீப் என்றுதான் ஏ ஆர் ரகுமான் பெயர் இருந்துள்ளது. அவர் திலிப்பாகவே இருந்திருக்கலாம் என்றும் அவர் மதம் மாறாமல் இருந்திருந்தால், தனது வீட்டில் பேசி அவரையே திருமணம் செய்து இருப்பேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னதாக, சண்டை, சச்சரவு எதுவும் இல்லாமல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக நடிகை மோகினி அந்த பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

