திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா. S.T.சாமிநாதன்.
இவர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் தொழில் அதிபர் ஆவார்.
இவரது பெயர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வீராசாமிநாதன் தமுத்துப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார்.
அப்போது அவரைப் பார்க்க வந்த எரியோடு மத்தனம்பட்டியை சேர்ந்த மணி என்பவர் சால்வை பொருத்த வந்தார்.

அப்போது சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரா சாமிநாதனின் கழுத்தின் பின்பகுதியில் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அலறியடிக்க அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை தடுக்க முயன்ற வீராசாமிநாதனின் ஆதரவாளர் நாசிமுத்து என்பவருக்கும் கத்தி குத்து விழுந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மணியை பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் காயமடைந்த வீராசாமிநாதன் மற்றும் நாச்சிமுத்துவை உடன் இருந்தவர்கள் வீட்டு முதலுதவி சிகிச்சைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் வீராசாமிநாதன் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் உத்தேச பட்டியலில் உள்ள, ஒன்றிய செயலாளரை கத்தியால் குத்திய சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

