மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நதி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதை தமிழக முதலமைச்சர் விஜய் தவிர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று எச்சரித்த அவர், இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தில் விரிவான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. 13 பேர் கொண்ட சிறப்புக் குழு அறிவிப்பு..!
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், இதுகுறித்து பல தலைவர்கள் குரல் கொடுத்து வந்தாலும் முதலமைச்சர் விஜய் இன்னும் மௌனம் காத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

