பழனி நிலம் மோசடி வழக்கு மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனி கோவில் நிலம் மற்றும் பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு (CBI) மாற்றக் கோரி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், அன்னபூரணி சிவக்குமார் மற்றும் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மேகதாது விவகாரம்.. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தவெக தரப்பு கொடுத்த செக்..!
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கின் தற்போதைய புலனாய்வு நிலை குறித்து விரிவான நிலை அறிக்கையை (Status Report) தாக்கல் செய்ய சிபிசிஐடி (CBCID) தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

