நடிகர் தனுஷ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் நடத்திய ரத்த தான முகாம்கள் மற்றும் அது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய ரத்த தான முகாமில், ரசிகர்களின் சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பேசியதைத் தொடர்ந்து, அவர் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு விவாதங்கள் எழுந்துள்ளன.
உண்மையான காதலைப் பார்த்து 15 வருஷமாச்சு.. காமம் தான் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜோதிகா..!
தனுஷைத் தொடர்ந்து, இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களும் சத்தமே இல்லாமல் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் நடிகர்கள் தொடர்ந்து இதுபோன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவது மற்றும் அரசியலில் களமிறங்குவது குறித்து நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

