மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல்வர் விஜய் பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இது குறித்துத் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் இடையே பரஸ்பரம் முரண்பட்ட கருத்துகள் நிலவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் உரிமைகளைப் பலிகொடுக்கும் வகையில் கர்நாடகத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது தவறானது என்றும், இது காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப்பூர்வ வாதங்களைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராயனை விட ‘அந்த’ படம் சிறந்தவை.. ரசிகர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட தனுஷ்..!
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு இன்னும் வெளிவராத நிலையில், அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகள் இந்த விவகாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

