நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அது குறித்த விவாதங்களும் இணையத்தில் எழுந்து வந்தன. இது குறித்துப் பேசியுள்ள தனுஷ், தன் சினிமா பயணத்தில் ‘ராயன்’ திரைப்படத்தை விடவும், ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’, ‘மாரியான்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ராஞ்சனா’ போன்ற பல சிறந்த படங்கள் வெளியாகியுள்ளதாகத் தனுஷ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு உழைப்பையும் சிறப்பையும் ஒரு படத்திற்குக் கொடுத்தாலும், விருது கிடைப்பது என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் யதார்த்தமாகப் பேசியுள்ளார். ‘மெய்யழகன்’, ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ போன்ற தரமான படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் வருந்துவதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டு, அந்தப் படங்களை அவர் மனதாரப் பாராட்டியுள்ளார்.
அச்சச்சோ என்ன ஆச்சு?.. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ராம் சரணுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!
விருதை விட நல்ல சினிமாதான் முக்கியம் என்ற அவரது முதிர்ச்சியான அணுகுமுறைக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. தேசிய விருதுகள் குறித்த சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் ஓயாத சூழலில், தனுஷின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
#Dhanush on National Award Controversy 👀
— Gv (@gowtham0725) July 26, 2026
"Raayan vida Meiyazhagan & Maharaja better films dhaan… Aana Pudhupettai, Vada Chennai, Karnan, Maryan, & Raanjhanaa National Award miss pannapo yaarum pesaala."
"Inniku 90% oppose panraanga… Appo 10% kooda support pannala. Thatti… pic.twitter.com/zxyqwEZqC6

