தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் வெளியாகி உள்ளன.
புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய முதன்மைக் கட்டடத்தின் முதல் தளத்தில் பல தசாப்தங்களாக முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பொதுமக்களின் வருகை மற்றும் அரசு அதிகாரிகளின் தொடர் சந்திப்புகள் அதிகரித்து வருவதால், தற்போதைய அலுவலகத்தில் நிலவும் இட நெருக்கடியைச் சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் விசாலமான பகுதிகள் மற்றும் சிறந்த கடல் பார்வை (Sea view) போன்ற வசதிகள் இருப்பதால், முதல்வரின் அலுவலகம் மற்றும் செயலாளர்களின் அறைகளை அங்கு ஒருங்கிணைக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளம் (தற்போது கூட்டங்கள் நடைபெறும் பெரிய அரங்கம் மற்றும் உணவகம் அமைந்துள்ள பகுதி) முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு முதல்வரின் புதிய அலுவலகமாகச் செயல்படவுள்ளது. அங்கு ஏற்கனவே இயங்கி வந்த சில துறைகளின் பிரிவுகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இந்த இடமாற்றம் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

