அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாகச் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அளித்த விளக்கம் அளித்துள்ளார். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதி (Merit) அடிப்படையில் மட்டுமே நடைபெறுவதாகவும், இதில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளோ அல்லது ஊழலோ இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், இம்முறை மிகவும் வெளிப்படையான முறையில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முந்தைய காலங்களில் நடந்தது போலப் பணம் கொடுத்துப் பதவிகளைப் பெறும் முறை இந்த ஆட்சியில் கிடையாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களின்படி இந்தப் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. நீதிமன்றங்களின் செயல்பாட்டைச் சீர்செய்யவும், நீதியை நிலைநாட்டவும் தகுதியான வழக்கறிஞர்களை நியமிப்பது அரசின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழி கல்வி ஒரு தடையல்ல.. மாணவர்களுக்காக அமைச்சர் கீர்த்தனாவின் உருக்கமான பதிவு..!
நியமனம் தொடர்பாக யாராவது பணம் கேட்பதாகப் புகார்கள் வந்தால், அதைத் தெரிவிக்கலாம் என்றும், அப்படிப் பணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக வெளியான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த வீடியோவில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பின்பற்றப்படும் தகுதி அடிப்படையிலான நடைமுறைகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

