நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் சூலூர் சம்பவத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள தாடி பாலாஜி அந்த வீடியோவில் ஒரு தகப்பன் ஆக விஜய் அவர்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
கோயம்புத்தூர் சூலூரில் 10 வயது சிறுமிக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து இருக்கிறது. அதை நினைக்கும், போது எனக்கு உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் அங்கு நேரில் செல்லவில்லை. இல்லையென்றால், நிச்சயமாக சென்றிருப்பேன். இதன் மூலம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வேண்டுகோளை வைக்கிறேன்.
இதற்கான நடவடிக்கையை நீங்கள் உடனடியாக எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். அதையும் தாண்டி இது போன்ற விஷயங்களுக்கு சரியான தண்டனையை கொடுத்தீர்கள் என்றால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாடி பாலாஜியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

