தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை தேர்தலில் வெற்றி கண்டது. சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து தமிழக முதலமைச்சர் விஜய் ஒன்பதாம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
முதல் அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டது. எனினும், மீதம் இருந்த வனத்துறை வேளாண்மை வருவாய் வீட்டு வசதி கூட்டுறவு சிறு குறு நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டு தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு 23 அமைச்சர்களும் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!
இந்த நிலையில், கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைகள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் வீசி காவின் வன்னியரசு அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் சாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வன்னிய அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை என்கிற சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

