சரத்குமாரின் மகளான வரலட்சுமி அறிமுகமான முதல் திரைப்படம் போடா போடி. இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும், ஆனால் வரலட்சுமி நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதே சமயம், அவருடைய நடனமும் பட்டையை கிளப்பின. இதன் காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது.
தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட எல்லா படங்களுமே தோல்வியைத் தான் சந்தித்தன. விஷாலை அவர் காதலித்து வருவதாகவும் கிசுகிசுகளும் கோலிவுட்டில் வட்டமடித்தன. மேலும், சரத்குமாருடன் விஷாலுக்கு ஏற்பட்ட மோதல் தான் இந்த காதல் பாதிலேயே முறிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
கனவுல வந்த கருப்பன்.. நிஜத்தில் நடந்த மிராக்கிள்.. மொத்த தியேட்டரையும் தூக்கிய 217 பேர்..!
இப்படிப்பட்ட நிலையில், தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்மையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சர்ச்தேவ்டன் வரலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த காதலுக்கு சரத்குமார் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக, சரத்குமாரின் இரண்டு மனைவிகளுமே அந்த திருமணத்தில் பங்கேற்றது பார்ப்பதற்கு ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், கலந்துகொண்ட வரலட்சுமி தான் மிஸ் செய்த படங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில், பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது தான் இருக்கும். அதை போல் 7ஜி ரெயின்போ காலனி வாய்ப்பும் கிடைத்தது. அது இளம் வயது தான் மேலும், வெங்கட்பிரபுவின் சென்னை 28 படமும் நான் செய்திருக்க வேண்டியது ஆனால், எனக்கு வயது மிக குறைவாக இருந்த காரணத்தினால் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளாததால் நான் நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

