மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, விஜய் நடிப்பில் வெளியான பைரவா என தமிழில் தொடர்ந்து நடித்து வந்தார்.

கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!
முன்னதாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம். மேலும், விஷாலுடன் சண்டைக்கோழி 2, சூப்பர் ஸ்டார் உடன் அண்ணாத்த என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினர் கீர்த்தி சுரேஷ். இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான மகாநடி திரைப்படத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்திருந்தார்.

அந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்தாலும், தற்போது என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கதையின் நாயகியாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு சமீப காலமாக மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்றால் அது மாமன்னன் தான்.
சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

தென்னிந்திய படங்களை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் மூலமாக பாலிவுட்டிற்கு சென்றார். கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி திரைப்படம். விஜயின் தெறி படத்தின் ரீமேக் அது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி, ரவுடி ஜனார்த்தனா, தோட்டம் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மகாநடி படத்தில் முதலில் பயத்தில் நோ சொல்லிவிட்டேன். எல்லோருமே ஏன் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் வேண்டாம் என்று சொல்கிறாய் என கேட்டார்கள். ஆனால், இப்போது நினைத்து பார்த்தால் அது எல்லாமே மேஜிக் மாதிரி உள்ளது. அந்த படத்திற்கு, பிறகு எனக்கு நிறைய பயோபிக் ஆபர்கள் வந்தன. ஆனால், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனெனில், எல்லா நேரமும் அது ஒர்க் ஆகுமா என்று தெரியாது என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

