சினிமாவில் காமெடி மன்னனாக மகுடம் சூட்டப்பட்டவர் கவுண்டமணி. இவர் நிறைய படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். இப்போது, வயோதிகம் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை.

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கவுண்டமணி குறித்து பேசி இருக்கும் விஷயங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில், கவுண்டமணி மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், எனது டீனேஜ் வயதில் ஒரு ஹீரோயின் மீது மிகப்பெரிய கிரஷில் இருந்தேன்.

அவரைப் பற்றி எப்போதுமே புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால், அவருக்கு அந்த ஹீரோவை பிடிக்காது. அந்த ஹீரோவிடம் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் இப்படி ரசிக்கிறாய் என்று கேட்டார். மேலும், அந்த ஹீரோவை ரசிப்பதை நிறுத்திவிடு இல்லை என்றால், நீ தூங்கும்போது உனது முடியை வெட்டி விடுவேன் என கூறுவார் என்று அந்த பேட்டியில் சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்திருந்தார்.

