2021 ஆம் ஆண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பதாக இருந்தார். ஆனால், அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவல் காரணமாக அந்த முயற்சியை அவர் அப்படியே கைவிட்டு தனது கட்சிக்கும் மூடு விழா நடத்தியது அனைவரும் அறிந்த விஷயம்.
இப்படி இருக்கையில், மத்தியில் ஆளும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் நெருக்கம் காட்டி வந்தார். தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரத்திற்காக மேல் இடத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் திமுகவுடன் மிகவும் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். மேலும், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாகவும் ஈடுபட்டு வரும் அவர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய அவரின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருவதால், அந்த தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான மருத்துவர் எழிலன் ரஜினியை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!
அப்போது, தொகுதியில் நடைபெற்ற பணிகளின் தொகுப்பு அவரிடம் அளித்து உரையாடியதாகவும் எழிலன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நெருங்கி வரும் வேலையில், திமுக வேட்பாளரை சந்தித்துள்ளது அரசியல் தளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

