கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டி ஆர் சண்முகசுந்தரம் என்பவர் திமுக வில் தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சட்டசபைத் தேர்தலில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு சீட்டு கேட்டு விருப்பமுனு தாக்கல் செய்து காத்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக கவிதா கல்யாண சுந்தரம் என்ற பெண் வேட்பாளருக்கு சீட்டு வழங்கப்பட்டது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!
இதனால் விரக்தி அடைந்த சண்முகசுந்தரம் திமுகவில் இருந்து விலகி சுயேசையாக வேட்பு மனு தாக்கல் செய்து பக்கெட் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதை அடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சண்முகசுந்தரம் வீட்டில் மாலை துவங்கி இரவு 11 மணி வரை 5 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில் அங்கிருந்து பணம், ஆவணம் எதுவும் கைப்பற்ற படாத சூழ்நிலையில் சோதனை குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காமல் சென்றனர். சண்முகசுந்தரம் மிகப் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார் இவருக்கு கடந்த முறை திமுகவில் சீட்டு வழங்கப்பட்டு சுமார் 2400 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கத

