நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்ட்டா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்ட்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடைபெற்றது. அதில், ஜாய் கிரிசல்ட்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!

ஒரு வழியாக பிறந்திருக்கும் குழந்தை அவருடையது தான் என்பது நிரூபணம் ஆனது. இதனால், அவருக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பதும் நீதிமன்றத்தின் மூலம் முடிவானது. இதனால், நிம்மதி ஜாய் அடைந்தார். இத்தனை மாத போராட்டத்திற்கு நீதி கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்து போனார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஜாயின் பதிவு வைரலாகி வருகிறது. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டெஸ்ட் முடிவுகளுக்கு பிறகு என்ன நடந்தது? மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்கிறார் என்று கேட்டவர்களுக்கான அப்டேட் இதோ, என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன் எனவும் கூறியிருக்கிறார். தனது மகனை விட்டு பிரிய மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். இன்னும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

