தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் புதுச்சேரியில் வரும் 9ஆம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வருகைபுரிந்த வண்ணம் உள்ளனர். இன்று புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று புதுச்சேரி ஓசுது தொகுதியில் எங்கள் NDA வேட்பாளர் திரு இ. தீப்பைந்தன் அவர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ரோட்ஷோவிற்கு கிடைத்த வரவேற்பு, NDA-வின் நோக்கும் தலைமையின்மீதும் மக்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

புதுச்சேரி மக்கள், காங்கிரஸின் வெற்று வாக்குறுதிகளுக்கும் NDA-வின் நிரூபிக்கப்பட்ட ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக அறிவார்கள்.

மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களின் தலைமையில், இரட்டை என்ஜின் NDA அரசு வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கியுள்ளது — தொடர்ந்து முன்னேற்றத்திற்காக ஓசுது தொகுதி உறுதியாக NDA-வுடன் நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.

